
நான் அறிய வந்த சில சுவாரஸ்யமான தகவல்களை இங்கு அவ்வப்போது பதிவுகளாக அளிப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். காரணம் "I`m learning a lot."
:)
சொல்லவரும் விஷயங்கள் பலவற்றையும் வரி வரியாக, விளக்கம் விளக்கமாக சாதகம் பாதகம் ஆய்ந்து எழுதுவதில்லை. காரணம் சமயம் இருப்பதில்லை. நாலுவரிகளில் சொல்லவந்ததை மட்டும் சொல்லிவிட்டு நகர்ந்து கொண்டே இருக்கின்றேன்.அந்த நாலுவரிகளில் மொத்தத்தையும் விளக்குதல் என்பது மிகக் கடினம். அந்த நாலுவரிகளையும் நாற்பது வரிகளாக்க நானூறுவரிகளாக்க உங்களுக்கு இணையம் இருக்கின்றது, கூகிள் இருக்கின்றான்.
"Please do some research by yourself."
உதாரணத்துக்கு பல இலவச மென்பொருள்களை பற்றிய அறிமுகம் முந்தைய பதிவுகளில் எழுதியுள்ளேன்.அதை எப்படி பயன்படுத்தவேண்டும் முதலான சகல விவரங்களும் இணையத்தில் தேடக் கிடைக்கின்றதே.
இங்கே கார்த்திக் என்ற ஒரு நண்பரின் கடிதத்தை பாருங்கள்.
"வணக்கம் பிகேபி அவர்களே நான் தங்களின் ஒரு பதிவை கூட விடாமல் வாசித்து விட வேண்டும் என்பதால் தான் மின்னஞ்சல் வாயிலாக பெறுகிறேன்.என்போன்ற படிக்காதவர்கள் நெறைய பேர்.தங்களின் பின்னுட்டத்தில் அடிக்கடி ஆங்கிலத்தில் எழுத வலியுறுத்துகிறார்கள்.
அப்படி ஆங்கிலத்தில் எழுதினாலும் தமிழில் எழுதுவதையும் தொடருங்கள்.நிறுத்திவிடாதீர்கள்"
இப்படிப்பட்ட என்னைப்போன்ற பட்டதாரியில்லாத சாதாரண கணிணி பயனாளர்களுக்கே இப்பதிவுகள்.
"புத்திசாலித்தனமாய்" யோசிப்பவர்கள் எடக்கு முடக்காய் கேள்விகளை எழுப்ப கணிணி வல்லுனர்களை தயவு செய்து அணுகவும்.
"kindly clarify"-என்று எனக்கு வந்த கீழ்கண்ட முகமறியாதவரின் வார்த்தைகள் தான் என்னை இங்கு இப்படி எழுத வைத்தது.இது கடந்த பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.
"Every thing is ok. But what will happen if I click "no" when opening such mails that requests for "confirmation of reading the mail.kindly clarify"
எனது பதில் "Every thing has its own limitations.Isn`t it sir?"
ரொம்ப நாளைக்கப்புறமாய் இப்படி ஒரு குப்பை பதிவு.வருத்தமாய் இருக்கின்றது.
