
இணையத்தில் வணிக ரீதியில் எழுதுவோர்க்கு வேண்டுமானால் சம்பளம் கிடைக்கலாம். ஆனால் முழநேர அல்லது தன்னார்வ எழுத்தாளர்கள் முழுக்க முழுக்க சில ஆன்லைன் விளம்பரங்களையே நம்பி இருக்கவேண்டியுள்ளது.கூகிள் ஆட்சென்ஸ் வேறு "தமிழ் எதிர்ப்பாளனாய்" இருந்து கொண்டு "பொது சேவை விளம்பரம்" மட்டும் தந்து அவன் பங்குக்கு வெறுப்பேற்றிக் கொண்டிருக்கின்றான்
தீர்வுதான் என்ன?
Paypal ஒரு தீர்வு தருகின்றது.இதை Donation Buttons என்கின்றார்கள். உங்கள் வலைப்பக்கத்தில் இதை நிறுவினால் ஆர்வமுள்ள வாசகர்கள் உங்களுக்கு மாதம் குறைந்தது 1 டாலராவது நன்கொடை வழங்க அது எளிதாய் இருக்கும்.கிரெடிட் கார்டின் ஆதிக்கம் உலகளாவியது. அதுவழியே ஒரு சொடுக்கில் சில டாலர்கள் உங்களுக்கு வாசகர்கள் நன்கொடை வழங்கலாம். பேபாலில் இலவசமாய் கணக்கு ஒன்று நீங்கள் திறக்கவேண்டும். உங்களுக்கும் எளிது, பணம் வழங்க விரும்பும் நண்பர்களுக்கும் அது எளிது.பேங்க் அக்கவுண்ட் நம்பர் போன்ற தகவல்களை பப்ளிசிட்டி செய்யவேண்டிய தேவையும் வராது.
அதிக விவரங்களுக்கு கீழ்கண்ட சுட்டியை சொடுக்கலாம்.
https://www.paypal.com/us/cgi-bin/webscr?cmd=_donate-intro-outside
உற்சாக வார்த்தைகளால் மட்டுமல்லாமல் தரமான முழநேர எழுத்தாளர்கள் அவர்களின் பொருளாதார நெருக்கடியை தவிர்க்க இப்படி டாலர்களாலும் ஊக்குவிக்கப்படவேண்டும். அப்போது தான் நல்ல நல்ல படைப்புகளை நம் தமிழுலகம் எதிர்பார்க்க முடியும்.நல்லவேளை நான் ஒரு அலுவலகம் போய் வரும் குமாஸ்தா எழுத்தாளன்.
