
சகல தொல்லைகளுக்கும் காரணம் இந்த கடவுள் தான். அவனை ஒரேயடியாக விட்டுதொலைத்தால் என்ன என யோசித்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு "நல்லவனாய் இரு. கடவுள் எதற்கு" என்ற கோஷத்துடன் கிளம்பியிருக்கின்றார்கள். வாஷிங்டனிலும் லண்டனிலும் போஸ்டர்கள் நாத்திகம் பேசுகின்றன. அப்படியாவது ஒரு யுட்டோபியா கிட்டாதா என்ற நம்பிக்கையில்.
யூனிவர்ஸ் என்பதே பொய் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிவர்ஸ்கள் அங்கே மிதந்துகிடப்பதால் மல்டிவெர்ஸ் என்பதுதான் சரி என்கின்றார்கள். அத்தனை மல்டிவெர்ஸ்கள் கணக்கின்றி இருந்தும் நம் பூமியில் மட்டுமே உயிரினம் வாழமுடிகின்றதென்றால் யாரோ ஒருவர் ஆரம்பத்தில் கொத்தவேலை செய்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்.

கனவில் எவனோ ஒருவன் துப்பாக்கியிலிருந்து சுட்ட தோட்டா ஒன்று என் தொண்டையை கிழிக்க பயந்து போய் விழித்தேன். அப்படா நிஜ உலகில் இன்னும் பத்திரமாக இருக்கின்றேனே என மகிழ்ந்து கொண்டேன். ஒருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ? Me gone crazy?
![]() பறவை சிக்கிக் கொள்ளும்; தன் நாவினால் மனிதன் சிக்கிக் கொள்வான் -தாமஸ் புல்லர் |
