Tuesday, May 15, 2007

USB-யால் கணிணிகளை இணைக்கலாம்

அருகருகேயுள்ள இரு கணிணிகளிடையே கோப்புபரிமாற்றம் செய்ய வேண்டும். துரதிஷ்டவசமாய் நெட்வொர்க் அங்கேயில்லை. அதற்கான சாத்தியமுமில்லை. ஸ்நீக்கர்நெட் (Sneakernet) எனப்படும் இங்கே ஒரு டிஸ்கில் காப்பி பண்ணி பின் அங்கே அந்த டிஸ்கை எடுத்து சென்று இணைத்து பேஸ்ட் பண்ணும் முறை செய்ய பொறுமையும் இல்லை.இது போன்ற தருணங்களில் USB to USB கேபிளால் இணைப்பு கொடுத்து கோப்புபரிமாற்றம் செய்ய இப்போதெல்லாம் வழி இருக்கின்றது.USB முனை இல்லா கணிணிகளே இன்றைக்கு இல்லையாதலால் நெட்வொர்க் கார்டு பற்றியோ அல்லது ஐபி அட்ரஸ் குறித்தல் பற்றியோ கவலை பட தேவை இல்லை.இரு கணிணி USB முனைகளையும் டொர்னடோ (The Tornado) எனும் கேபிளால் இணைத்தால் u are all set.எளிதாய் கோப்பு பறிமாற்றம் செய்யலாம்.என்ன இப்போதைக்கு இக்கேபிளின் விலை ஏறத்தாழ 60 டாலர்கள்.ஆனால் அவசரத்துக்கு ரொம்பவே உதவும் gadget.பறிமாற்ற வேகம் 25MB/s.கேபிள் நீளம் 4 அடிகள்.இதில் கூல் என்னவென்றால் இரு கணிணியிலும் எந்த ஒரு மென்பொருளும் நிறுவ தேவையில்லை.

Product Home Page

http://www.thetornado.com/site/product.shtml