Saturday, March 13, 2004

அவர்கள் சந்தோசமாகட்டும்

நான் நினைத்தது தப்பாகி விட்டது முதன் முதலாக.சப்னா ஒரு இந்திய முஸ்லிம் பெண்.பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை கன்னாபின்னாவென திட்டுகிறாள்.இந்தியா ஜெயிக்க வேண்டுமென அல்லாவை வேண்டுகிறாள்.அக்தரை ஒரு பிடிபிக்கிறாள்.அலுவலகம் விட்டு மதியம் உனவுக்காக உணவகம் போகும் போது காரில் வைத்து சப்னாக்கும் தாமஸ்க்கும் செம சண்டை.தாமஸ் கேரள கிறிஸ்தவன்.பாகிஸ்தானை சப்போர்ட் பண்ணுகிறான்.கேட்டால் அப்போ தான் இரு நாடு உறவுகள் நன்றாய் நீடிக்கும் இல்லையேல் "There is a possiblility of terrorist threat for the players" என்கிறான்.சப்னா ஒரு நிமிஷம் ஆடிப் போனாள்."My sweet Tendulkar.O God No No" (இன்று அடித்தது என்னமோ 28.டிராவிட்.99).அவர்கள் பூமியில் அவர்கள் விளையாடி ஜெயித்து அவர்கள் சந்தோசமாகட்டும் இது தாமஸின் விளக்கம்..ஒன்னுமே புரியவில்லை.பாகிஸ்தான் மக்கள் மனதில் என்ன ஒடுகிறதோ?

வகை:சலோ இந்தியா