Wednesday, March 31, 2004

வரிகள்புதன்-4

கேட்க தோன்றுதே

கீழ்த்தெரு பைத்தியம் சொல்லிக்கொண்டு போனான்

அண்ணா போல் அறிவை தேடாதே

பெரியார் போல் பகுத்தறிவை பேசாதே

எம்ஜிஆர் போல் ஏழைக்கு உதவாதே

காமராஜ் போல் காரியத்தில் மூழ்காதே

கண்ணகி போல் கற்ப்பாயிருக்காதே

கண்ணதாசன் போல் கவிதையாய் கொட்டாதே

களிப்பாய் இரு தினமும் களிப்பாய் இரு

அதிகமாய் போனால் உலகம் என்ன செய்யும்?

சிலை வைக்கும்.