இதற்கு முந்தைய யுகமான துவாபரயுகத்தை பார்த்தால் அதில் மொத்தம் 864,000 ஆண்டுகள் இருந்தனவாம்.அது கிருஷ்ணா வாழ்ந்த மகாபாரதகாலம்.
அதற்கும் முன்பு இருந்த திரேதாயுகத்தில் இன்னும் அதிகமாய் 1,296,000 ஆண்டுகள் இருந்தனவெனவும் அக்காலத்தில் தான் இராமனும் வாழ்ந்தான் என்கின்றார்கள். அது ராமாயணகாலம்.
அதற்கும் முன்பு முதலாவதாக இருந்த யுகம் தான் சத்யுகம்.அதில் மொத்தம் 1,728,000 ஆண்டுகள் இருந்தனவென்கின்றார்கள். அக்காலம் தான் பூமியின் பொற்காலமாம். ஒவ்வொருவரும் 100,000 ஆண்டுகள் வரை வாழ்ந்திருந்தார்களாமே.
இந்த நான்கு யுகங்களும் ஒரு சுற்றுசுற்றி வருதலின் பெயர் தான் ஒரு சதுர்யுகி (Chaturyugi). ஒரு Chaturyugi = மேலே எல்லாம் சேர்த்து மொத்தமாய் 4,320,000 ஆண்டுகள்.
கலியுகம் முடிந்ததும் என்னவாகும்? மீண்டும் பொற்காலமான சத்யுகம் தொடங்கி இன்னொரு Chaturyugi ஆரம்பிக்கும். இப்படியாக மொத்தம் 71 Chaturyugi உண்டாம். இந்த 71-ம் சேர்ந்தது ஒரு Manvantara( Manu) ஆகின்றது.நாம் இப்போது இருப்பது 28-ஆவது Chaturyugi-ல், 7-ஆவது Manu-வான Vaivasvat Manu-ல்.
பிரம்மாவின் ஒருநாள் ஒரு கல்பா (Kalpa) எனப்படுகின்றது. இது 14-Manuக்களை கொண்டது. அதாவது மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள். இந்த ஒரு நாள் முடிந்து பிரம்மா தூங்கப்போகும் போது மொத்த உலகமும் அழிந்து மறுநாள் அவன் விழிக்கும் போது புது உலகம் உருவாகும் என்பது நம்பிக்கை. ஆக வேதங்களின் படி இன்றைய உலகத்தின் மொத்த ஆயுட்காலம் 4,294,080,000 ஆண்டுகள். நாம் இருக்கும் இந்த 2008-ம் வருடம் வேதகாலண்டரின் படி 1,955,885,109-ஆவது வருடம்.
நீங்கள் கீழ் கண்ட சுட்டியிலும் பார்க்கலாம்.
http://www.timeanddate.com/calendar/?year=1752&country=1
இந்த உலகத்தின் ஆயுட்காலமாக மொத்தம் 4,294,080,000 ஆண்டுகள் இருக்க நானோ அந்த 11 நாட்களை பற்றியே கவலைக்கொண்டிருக்கின்றேன். எவ்வளவு சின்னவன் நான்.
ஆமையும் வெல்லும்!! முயலாமை வெல்லாது!!! |