
ஜியோ தெர்மல் அப்படி இப்படி என சமுதாயத்துக்கு எதாவது செய்ய சிலர் மூளையை குழப்பிக்கொண்டிருக்கும் போது இன்னும் சிலருக்கோ கே-மேரேஜும், கோ-கிரீனும் தான் ரொம்ப முக்கியமாய் தெரிகின்றது. போராடி ஓரினக்கல்யாணத்தை சட்டபடியாக்கி பின்னால் என்னத்தை கிழிக்கப்போகின்றார்களோ?.மக்கள் தொகையை கட்டுப்படுத்த இது ஒன்றுதான் வழியா? பள்ளி பள்ளியாய் சிறார்களுக்கு அது ஒன்றும் குற்ற மனப்பான்மை கொள்ள தவறான செய்கை அல்ல. உங்களுக்கு பிடித்திருந்தால் ஆணும் ஆணும், பெண்ணும் பெண்ணும் கல்யாணம் பண்ணிக்கொள்ளலாமென தன்னார்வ தொண்டர்கள் பாடமெடுக்கின்றார்களாம். கேவலம். பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்புவதற்கு கூட பயமாயிருக்கின்றது.
http://www.youtube.com/watch?v=16Ed1kb8B6U
http://www.youtube.com/watch?v=UKQXd0MpZA8
தொழிற்சாலைகளிலிருந்து வெளிப்படும் கிரீன்கவுஸ் வாயுவை டன்கணக்காக அளவிட்டு அதற்கேற்ப ஏழைபாழைகளை வரி கட்ட விடலாமென கோப்பன்கேஹனில் ஒரு சமுதாய பிரச்சனையை காசாக்க பார்த்திருக்கின்றார்கள். இந்த எக்கனாமியில் இப்படித்தான் காசு பண்ணவேண்டுமா? ஏற்கனவே மேலைநாடுகள் இதுவரை மேலே அனுப்பியிருக்கும் டன்கணக்கான கிரீன்கவுஸ் வாயுவை கணக்கிட்டு அதற்கு யார் காசு கொடுப்பதாம். நல்ல டன் டணக்காவாயிருக்கின்றதேவென வளரும் நாடுகள் கேட்டதில் நியாயம் இருப்பதாகவே படுகின்றது. இந்த கிரீன் சமாச்சாரம் இப்போது எல்லா இடங்களிலும் ஒரு மதமாகவே பாவிக்கப்படுவது கொடுமை. செய்கையில் ஒன்றுமில்லாமல் எங்கே ஏறினாலும் நாங்கள் கிரீன் கட்சியாகும் என சும்மாவாச்சும் உளருவதும் மற்றவங்கெல்லாம் கிரீனாகும் முன்னாலே நாங்கள் கிரீனாகும் என பிதற்றுவதும் சோகம்.

நண்பர்கள் அனைவருக்கும் 2010 புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஒரு கடிகாரம் கொண்டோனுக்கு சரியான நேரம் தெரியும். இரு கடிகாரம் கொண்டோனுக்கு எப்போதுமே சந்தேகம் தான். எங்கே விழுந்தாயென பார்க்காதே, எங்கே வழுக்கினாயென பார். பின்கண்ணாடி வழி நடந்ததை பார்ப்பதைவிட, முன்கண்ணாடி வழி முன்னே வருவதை பார். நீ சொல்வதை வேண்டுமானால் சந்தேகப்படுவார்கள். ஆனால் நீ செய்வதை மக்கள் நம்பித்தான் ஆகவேண்டும். முன்போக்கி செல்லும் போது கனிவாயிரு. ஒருவேளை பின்நோக்கி வரநேரிட்டால் யாராவது உதவுவார்கள்.. ரொம்ப விளக்க வேண்டியதில்லை. நண்பர்களென்றால் நம்புவார்கள். எதிரிகளென்றால் எப்படியும் நம்பப்போகிறதில்லை. யாருக்காவது குழிதோண்டப் போகிறாயா? இரண்டாகத் தோண்டு. உனக்கும் சேர்த்து. மகிழ்ச்சியாய் நீ வீணாக்கிய தருணங்களெல்லாம் வீணானவையல்ல. பயமில்லாமை தைரியமல்ல. பயநேரங்களிலும் சரியாய் செயல்புரிவதே நிஜ தைரியம். அப்பன் எத்தனை உயரமாயிருந்தாலென்ன நீ உயர நீ தான் வளரவேண்டும் எதிர்காலத்தை சரியாக கணிக்க அதை நாமே உருவாக்க வேண்டும் |
